Monday, January 28, 2013

திருநெல்வேலியின் தென் திருப்பதி

திருநெல்வேலியின் தென் திருப்பதி:

நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலை மட்டுமே குறிக்கும். 

இக்கோவில் ஸ்வேதா வராஹ மலைக்கு மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள பெருமாளை வழிபட்டால் அது திருப்தி பெருமாளை வழிபட்டதுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 7 தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறந்த சுற்றுலாத் தளம்.


--------

Tirunelveli Then-Tirupathi:

The Mela Thiruvenkatanathapuram temple’s sanctum sanctorum has Lord Srinivasa deity. It is located at the top of the Swetha Varaha hill.The temple is located 7 to 10 km south west of Tirunelveli. 


This temple/place is also called Thirunankovil. The most importance of this temple is that visiting this temple is equal to the visit to Tirupathi.

திருநெல்வேலி: நெல்லுக்கு வேலி கட்டிய விழா!!!

திருநெல்வேலி: நெல்லுக்கு வேலி கட்டிய விழா!!!


தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,நெல்லை என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது. முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரபரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான். வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.

அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்... என்று வேண்டினார். சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதிலும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது? என வேகமாய் வீடு திரும்பினார்.

என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். நெல்லுக்கு வேலியிட்ட நாதா என்று விழுந்து வணங்கினார். சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, வேணுவனம் என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, நெல்வேலி ஆனது. பின், மரியாதை கருதி, திரு என்ற அடைமொழி சேர்ந்து, திருநெல்வேலி என மாறியது. சிவன், நெல்லையப்பர் எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும். தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம். இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, நெல்லையப்பர் எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.

Guess this place!!!

Guess this place!!!

Answer: Ettayapuarm Aranmanai

Wednesday, January 23, 2013

ஆதிவராகர் திருக்கோயில்


ஆதிவராகர் திருக்கோயில்:

To view the English translation see below the Tamil version.

ஆதிவராகர் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டமான கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ளது. இங்கு எளுந்தரிளியுள்ள இறைவன் பெயர் ஆதிவராகப்பெருமாள் மற்றும் பூமாதேவி அகும். மூலஸ்தானத்தில் ஆதிவராகர் மடியில் பூமாதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு "நித்ய கல்யாணப்பெருமாள்' என்றும் பெயர் உண்டு. இக்கோவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.இக்கோவில் விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலாரூபமாக இருக்கிறது. இத்தலத்திற்கு திருக்கரந்தை மற்றும் கல்யாணபுரி என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இக்கோவில் பின்னால் ஒரு கதை உள்ளது வாருங்கள் காண்போம். ஒரு சமயத்தில் குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். இங்கு பல இடங்களுக்கு சென்று சிவ பெருமானை தரிசித்து வந்தான் , பின்பு பெருமாளை தரிசிக்க விரும்பினான். அதற்காக ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிறிது காலத்தில் இந்த இறைவன் இருந்த இடம் மறைந்துவிட்டது. ஒரு நாள் பக்தர் கனவில் இறைவன் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். பக்க்தரால் அச்சிலை இருந்ததைக் கண்டுபிடித்து கோவில் கட்டப்பப்பட்டது.


Sri Adhi Varaha Perumal temple is located in KallidaiKurchi at Tirunelveli. In this temple Lord Adhi Varahaswami appears with bhooma Devi on His lap looking at Him. He is also called as Nitya kalyana Perumal. Here, Mothers Sridevi and Bhoodevi are in separate shrines in the prakara.There is a shrine in the vimana-tower above sanctum sanctorum for Reclining Perumal with Mother Sridevi & Bhoodevi.The Dasavathara – 10 incarnations of Lord Vishnu- are in idol forms behind the Perumal shrine.

There is a story behind the construction of the temple.Kubera, the God of Wealth came down to earth to seek relief from a curse he incurred. After worshipping various Shiva temples, he desired to worship Lord Vishnu. He made an idol of the Lord, installed it on the banks of River Tambiraparani and worshipped. In course of time, the place disappeared. Lord appeared in the dream of a devotee and disclosed His presence in the place. The devotee found the idols. The temple was built later.

Riddles Corner


Riddles Corner: :-)

Lets start commenting our Answers
2Like ·  · 

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் - திருப்புடைமருதூர்


அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் - திருப்புடைமருதூர்:

To view the English translation see below the Tamil version.

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் என்னும் தலத்தில் உள்ளது. இயற்கைச் செழுமை நிரம்பியதாக மட்டுமன்றி, இறையருள் தரும் ஆன்மிகத் தலமாகவும் திருப்புடைமருதூர் உள்ளது எனலாம். ஒருபுறம் வற்றாத தாமிரபரணி, நதிக்கரையில் பிரமாண்டமான கோயில், கோயிலைச் சுற்றி நிற்கும் மரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் என, இயற்கையும், ஆன்மிகமும் ஒருசேர தாலாட்டும் இடம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புடைமருதூர். தாமிரபரணி, கருணை ஆறு, ராமநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இங்கு அருள்மிகு நாறும்பூநாத சுவாமி, கோமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் மிகப் பிரமாண்டமானது. ஒரு சமயம் சிவனிடம் தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்.

பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார். அம்பினால் காயம்பட்ட மான் அங்கிருந்து தப்பி ஓடி ஓர் மருதமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அம்மருதமரத்தை வெட்டும்படி மன்னர் உத்தரவிட்டார். அதன்படி, சேவகர்கள் கோடரியால் மரத்தை வெட்டவே அவ்விடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. பின், மன்னர் அவ்விடத்தில் பார்த்தபோது தலையில் கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருந்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தது சிவன்தான் என அசரீரி கேட்கப்பெற்ற மன்னர், அவரது உத்தரவுப்படி இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டார் எனப்படுகிறது .

இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். காயம்பட்ட சுயம்புமூர்த்தி என்பதால் அவரது காயத்தை ஆற்றிடும் பொருட்டு சந்தனாதி தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. சுவாமிக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கோமதியம்பாள், கோமாள் மலையின் கோமதி நதியில் இருக்கிறாள் என அசரீரி கேட்கப்பெற்று அதன்படி அந்நதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டவளாக ருத்ராட்சை மேனியை உடையவளாக பொலிவுற அருட்காட்சி தருகிறாள். சுவாமிக்கு முன்வலப்புறத்தில் பிரம்மதண்டம் தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக்கோவிலில் இன்னொரு சிறப்பு இங்கு சாய்ந்தநிலையில் சிவலிங்கம் உள்ளது. இதற்கு காரணம் ஒரு முறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர் இத்தலத்தில் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது, ஆற்றில் பெறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றைக்கடக்க முடியாத அவர், அக்கரையில் இருந்து கொண்டே தென்கரையில் மலர்கள் பூத்துக்குலுங்கிய மருதமரங்கள் நிறைந்த வனத்தின் மையத்தில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி "நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ' என மனமுருகி வேண்டி பாடினார். அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடச்செவியில் கைவைத்து ஒருபுறம் சாய்வாக திரும்பி, ரசித்து கேட்டார் பின்பு தன்னை நினைத்து ஆற்றைக்கடக்கும் படி கருவூர் சித்தரிடம் சிவன் கூறிடவே, அதன்படி ஆற்றைக் கடந்த கருவூரார் அவரை வணங்கி அருள் பெற்றார். இவ்வாறு, கருவூர் சித்தரின் பாடலை செவிசாய்த்து கேட்டதால், இங்கு சிவலிங்கம் இடப்புறம் சாய்வாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.

--- ---- ---- ---

Sri Narumbunatha Swamy Temple - Thiruppudaimarudhur:

Sri Narumbunatha Swamy Temple is at Thiruppudaimarudhur, in Tirunelveli District. Thiruppudaimarudhur is located near veeravanalllur. The surrounding locations of this temple are very beautiful. The temple nadavanam adjacent to the temple itself is a declared bird sanctuary, though tiny.

This is the kadai (last) marudhur temple of the three Marudha temples – Sri Sailam, Thiruvidai Marudhur and this one where the Marudha tree is present as the sthala viruksham. This massive temple with excellent stone sculptures is located on the bank of Thamirabarani River in a beautiful location. The temple has all the four styles of temple architectures namely Pandiya, Chera, Chola and Vijayanagara which add beauty for this glorious Temple.

The history of this temple was that the Devas – those in the celestial world – once begged the Lord to show them a place on earth equal to Kasi-Varanasi. Lord asked them to place His Brahmmadanda on the floor which moved towards River Tambiraparani and stood at Tirupudaimarudur where the temple stands today. Lord Shiva said that the place where the Brahmmadanda stopped was the place equal to Kasi.


The region was under the rule of Veeramarthanda then. He came to this place dense with Mardha trees for hunting. He targeted a deer which hid itself in the hole of a tree. The king ordered to cut the tree to get the deer out. But blood came out of the tree where the king found a Shivalinga with a hit on the head caused by the instrument. He heard a voice saying that Shiva himself graced them through the deer. He built the temple as directed by the Lord. In this temple Lord Shiva, a swayambumurthi graces leaning on a side slightly. There are scars of a sickle cut on the head and a hit of deer on the chest, Hence no abhishek is performed but only an oil application instead.

One more Greatness of this temple is that. Karuvur Chithar, celebrated Shiva devotee came to this place to worship Shiva. When he reached the northern bank of Tambiraparani, the river was in spate and could not cross the river to reach the temple. He spoke to Lord Shiva saying, “being in the midst of Marudha trees spilling fragrance from their flowers, can’t you help me to reach you.” Lord just leaned on a side to hear Chithar more clearly keeping his hand on the ears. The Lord advised Karuvur Chithar to simply cross the river with his thoughts resting on Him. Chithar did so and worshipped the Lord to his full satisfaction. As the Lord leaned on a side to hear Chithar, He is found leaning on a side.

Mother Gomathi Amman on the left of Lord’s shrine is brought from Komal hills as directed by a voice. She has the Rudraksha body and graces the devotees. A Brahmmadanda – staff-is also installed before the Lord on the right side.

Quotes

Photo

ரை வானில் வியாழன், சனி, வெள்ளி உள்ளிட்ட கோள்களும் அதன் துணைக்கோள்களும் துல்லியமாக தெரியும்


இம்மாதம் முதல் வரும் 3 மாதங்கள் வரை வானில் வியாழன், சனி, வெள்ளி உள்ளிட்ட கோள்களும் அதன் துணைக்கோள்களும் துல்லியமாக தெரியும். இக்கோள்கலை நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் நாம் காணலாம். அதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு தொலை நோக்கி மூலம் விண் வெளியை காட்ட மாவட்ட அறிவியல் மையத்தினர் தீர்மானித்தனர்.

இதுகுறித்து அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் கூறுகையில், ‘இன்னும் 3 மாதங்கள் அந்தியில் கிழக்கில் வியாழன் தெளிவாக தெரி யும். தொலைநோக்கி மூலம் பார்த்தால் அதன் துணை கோள்களாக அயோ, ஈரோப்பா, கனிமீட், கலிஸ்டோ ஆகிய துணைக்கோள்கள் நான்கும் தெரியும். வியாழனின் மேலும் கீழுமாக அவை தோன்றும் காட்சி அற்புத மாக இருக்கும். அதேபோல் அதிகாலை சூர்யோதயத்துக்கு முன்பு சனி நன்கு புலப்படும். வரும் சனி, ஞாயிறுதோறும் வானம் தெளிந்திருந்தால் மாலை 6.30 முதல் 7.30 வரை அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் கோள்களை பார்க்கலாம்’ என்றார்.

TAG: District Science Centre, Tirunelveli

அமெரிக்க கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் உலக அளவில் முதலிடம்


அமெரிக்க கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளான். இவனது தந்தை ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவராவார். இந்த சிறுவன் குறித்த விபரம் வருமாறு:-

மதுரை ஜல்லிக்கட்டு புகழ் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் வேலைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு அமெரிக்கன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது மகன் பிரணவ் கல்யாண். அங்கு உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கினான். இவனது ஆர்வத்தைக் கண்ட கல்யாண்குமார் கம்ப்யூட்டர் பற்றிய பல நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. மற்றும் என்.இ.டி. என்ற ப்ரீ வெப் புரோக்ராம் என்ற தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வு, ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் திறனாய்வு ஆகியவற்றை சோதிக்கும் விதமான பகுதிகளை உள்ளடக்கியது.

2 மணி நேரத்துக்கான இந்தத் தேர்வில் 40 முதல் 90 கொள்குறி வகை வினாக்கள், டிராக் அன்ட் டிராப், மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி., ப்ரீ வெப் புரோக்ராமை பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரீப்ட்டுகளுடன் வெப்சைட்டுகளை உருவாக்குவது தொடர்பான கேள்விகளும் உண்டு.

இந்த தேர்வில் உலக அளவில் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்தான். சாதனை படைத்த அந்தச் சிறுவனைப் பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், அவனுக்கு, உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது.

இதுபற்றி சிறுவன் பிரணவ் கல்யாண் கூறுகையில், என்ஜினீயர் மணிவண்ணன், கணித ஆசிரியை நதியா, சதீஷ், ஜோனாதன் உட்பரி ராஜேஷ் போன்றோர் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றான்.

பிரணவின் தந்தை கல்யாண்குமார் கூறுகையில், எனது மகன் 6 வயதிலேயே கம்ப்யூட்டர் புரோக்ராம்கள் எழுத ஆரம்பித்து விட்டான். நான் அவனை மைக்ரோ சாப்ட் சர்டிபிகேட் வாங்க ஊக்குவித்தேன். இந்த இளம் வயதில் உலக அளவில் அவன் சாதித்தது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராஜேஷ் கூறுகையில், ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி. வெப் புரோக்ராம்கள் அமைப்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் பிரணவ் போன்ற 9 வயது சிறுவனுக்கு இது கடினமே. அவனிடம் உள்ள தனித்திறமையால் இந்த சாதனையை அவனால் செய்ய முடிந்தது என்றார்.

சிறுவன் பிரணவின் தாத்தா மோகன் (70) கூறியதாவது: பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என்ற பரபரப்புகளுக்கிடையில் எனது பேரனின் இந்த உலக சாதனையை கேள்விப்பட்டு எங்கள் குடும்பமே உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. நான் மதுரையில் 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துள்ளேன். மதுரை பஸ் நிலையத்தில் கைக்குட்டை விற்றிருக்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என் பிள்ளைகள் படிக்க உதவினேன்.

எனது 5 பிள்ளைகளில் கல்யாண்குமார் மட்டும் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் அமெரிக்கா சென்றான். இன்று அவனது மகனும் இளம் வயதில் உலக சாதனை படைத்திருப்பது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Photo: அமெரிக்க கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளான். இவனது தந்தை ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவராவார். இந்த சிறுவன் குறித்த விபரம் வருமாறு:- 

மதுரை ஜல்லிக்கட்டு புகழ் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் வேலைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு அமெரிக்கன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது மகன் பிரணவ் கல்யாண். அங்கு உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கினான். இவனது ஆர்வத்தைக் கண்ட கல்யாண்குமார் கம்ப்யூட்டர் பற்றிய பல நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுத்தார். 

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. மற்றும் என்.இ.டி. என்ற ப்ரீ வெப் புரோக்ராம் என்ற தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வு, ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் திறனாய்வு ஆகியவற்றை சோதிக்கும் விதமான பகுதிகளை உள்ளடக்கியது. 

2 மணி நேரத்துக்கான இந்தத் தேர்வில் 40 முதல் 90 கொள்குறி வகை வினாக்கள், டிராக் அன்ட் டிராப், மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி., ப்ரீ வெப் புரோக்ராமை பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரீப்ட்டுகளுடன் வெப்சைட்டுகளை உருவாக்குவது தொடர்பான கேள்விகளும் உண்டு. 

இந்த தேர்வில் உலக அளவில் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்தான். சாதனை படைத்த அந்தச் சிறுவனைப் பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், அவனுக்கு, உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது. 

இதுபற்றி சிறுவன் பிரணவ் கல்யாண் கூறுகையில், என்ஜினீயர் மணிவண்ணன், கணித ஆசிரியை நதியா, சதீஷ், ஜோனாதன் உட்பரி ராஜேஷ் போன்றோர் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றான். 

பிரணவின் தந்தை கல்யாண்குமார் கூறுகையில், எனது மகன் 6 வயதிலேயே கம்ப்யூட்டர் புரோக்ராம்கள் எழுத ஆரம்பித்து விட்டான். நான் அவனை மைக்ரோ சாப்ட் சர்டிபிகேட் வாங்க ஊக்குவித்தேன். இந்த இளம் வயதில் உலக அளவில் அவன் சாதித்தது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். 

கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராஜேஷ் கூறுகையில், ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி. வெப் புரோக்ராம்கள் அமைப்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் பிரணவ் போன்ற 9 வயது சிறுவனுக்கு இது கடினமே. அவனிடம் உள்ள தனித்திறமையால் இந்த சாதனையை அவனால் செய்ய முடிந்தது என்றார்.

சிறுவன் பிரணவின் தாத்தா மோகன் (70) கூறியதாவது: பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என்ற பரபரப்புகளுக்கிடையில் எனது பேரனின் இந்த உலக சாதனையை கேள்விப்பட்டு எங்கள் குடும்பமே உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. நான் மதுரையில் 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துள்ளேன். மதுரை பஸ் நிலையத்தில் கைக்குட்டை விற்றிருக்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என் பிள்ளைகள் படிக்க உதவினேன். 

எனது 5 பிள்ளைகளில் கல்யாண்குமார் மட்டும் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் அமெரிக்கா சென்றான். இன்று அவனது  மகனும் இளம் வயதில் உலக சாதனை படைத்திருப்பது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்

ஆதிச்சநல்லூர்


ஆதிச்சநல்லூர்:

To view the English translation see below the Tamil version.


ஆதிச்சநல்லூர், இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில்,திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர்செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ளது. ”தாழிக்காடு” என்று தொல்லியல் அறிஞர்களால் பெரிதும் போற்றப்படுகிறது இவ்வூர் . கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது எனலாம். தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது.

தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்கலான மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



Adichanallur :


Adichanallur is an archaeological site in Tuticorin district in Tamil Nadu,India. This town is known locally as Aathichanallur, and has been the site of a number of very important archeological digs

The Iron-Age urn-burial site at Adichanallur, about 24 km from Tirunelveli town in southern Tamil Nadu, has attracted nationwide attention for three important findings: an inscription in a rudimentary Tamil-Brahmi script on the inside of an urn containing a full human skeleton; a potsherd (fragment of broken earthenware) with stunningly beautiful motifs; and the remains of living quarters (rampart wall, potters' kilns, a smith's shop and so on) close to the site

Among the artifacts discovered at the burial site were a profusion of red ware, black ware, black-and-red ware, copper bangles, copper ear-rings, iron spear-heads, terracotta lids with tiered knobs, terracotta vessels that could be used both as lids and as bowls, globular vessels and long-necked utensils. There were vases, pots with exquisite decorations, broken daggers and swords made of iron. There were also Neolithic celts, iron implements, urns with clan marks and urns with hooks inside

Share some interesting and unknown Facts about Tirunelveli!!!


Share some interesting and unknown Facts about Tirunelveli!!!

Tirunelveli


Tirunelveli:


Classification of Land regions and its applicability in the district of Tirunelveli:

The Tamil literature classifies the land on the earth into five regions. They are ,

(1) the Mountains or hills region,

(2)The Forest region,

(3)The Plains,

(4)The Sea and seashore and

(5) The Deserts.

The Mountains or hill areas are known as "Kurinji", the forests as "Mullai", the plains as "Marutham", the sea and the seashore as "Neithal" and the deserts as "Paalai". The district of Tirunelveli comprises of all the five above mentioned lands within its territory. This is the only district whose western boundary is a great mountain range called western ghat and the eastern boundary is the sea coast at Koodankulam and Ovari. In between these Mountain range(Kurinchi) and the seashore(Neithal) lies the other three classified regions viz.Mullai, Marutham and Paalai. It is a scenic beauty to have a view of the western ghat from the sea end of Koodankulam.


The classification of lands and the respective areas in the district of Tirunelveli.
1. Kurinchi ( The mountain and hilly region) - The western ghat
2. Mullai (The Forest region) – The Kalakkad and Mundanthurai forests
3. Marutham (The plains) - the river beds at Cheranmahadevi, Tirunelveli, Gangaikondan, Vallanad and Srivaikuntam
4. Neithal (Sea and the sea shore)- Koodankulam and ovary
5. Paalai (Sandy deserts)- Thisaiyanvilai, saattankulam, Udangudi

Share your most Memorable Moment/Experience which happened in your life?


Share your most Memorable Moment/Experience which happened in your life?

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில்


அருள்மிகு தென்னழகர் திருக்கோயில்:

To view the English Translation , see below the Tamil version

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசம் அருகில் உள்ள கோவில்குளம் என்னும் ஊரில் உள்ளது.

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், "தென்னழகர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, "ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான்' என்றும் பெயருண்டு.


முற்காலத்தில் கோயிலைச் சுற்றிலும் குளம் இருந்ததால் இப்பகுதி, "கோவில்குளம்' என்றழைக்கப்படுகிறது. முன்மண்டபத்தில் நாகர், விஷ்வக்ஷேனர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உடையவர் ஆகியோர் இருக்கின்றனர்.

மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார். கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு பூஜைகளும், திருவிழாக்களும் சிறப்பாக நடந்து வந்தது. தற்போது கோயில் சரியான பராமரிப்பில் இல்லாததால், விழாக்கள் எதுவும் நடைபெறுவதில்லை.

--- ----- ----- ----

Sri Thennazhagar Temple

Sri Thennazhagar Temple, is in Kovilkulam near Brahmmadesam Tirunelveli district. Staunch Vishnu devotee Sage Markandeya was visiting many Vishnu shrines on earth. On his way to Pothigai Hills, responding to his prayer, Lord gave the sage His darshan with Mothers Soundaravalli and Sundaravalli.

There also lived here a staunch Vishnu devotee who wanted to have the darshan of Lord in idol form. Lord appeared in his dream and informed of His presence in idol form in Kallazhagar temple near Madurai. The devotee brought the idol and installed here. The temple was built later. As the Murthy-idol is brought from Madurai Kallazhagar temple, Lord is named as Thennazhagar – Azhagar of South. He is also praised as Sripathy Vinnagar Peruman.

Presiding deity Perumal in sanctum sanctorum is made of a lime mixture called Karai. He graces in a standing form. As the original idol was damaged due to age, this is made and installed again, hence Tirumanjanam is not offered to the idol. Sage Markandeya is in a worshipping for near Perumal gracing with Mothers Soundaravalli and Sundaravalli. Original Garudazhwar is on the temple wall on the northeast corner. Special Tirumanjanam is offered to Garudazhwar only on Swati star day in Aadi-July-August. He would be dressed with a shirt made of flowers. Special pujas are performed for 10 days to Lord following the Aadi Pooram festival.

As there was a tank around the temple earlier, the place is named Kovilkulam, Kovil-temple, kulam-tank. Sri Vishvaksenar, Nagar, Tirumangai Azhwar, Nammazhwar and Udayavar-Acharya Sri Ramanuja adore the front mandap. The temple was known for its festivals in earlier days. Due to lack of proper administration, no festival is celebrated in the temple these days.

Tirunelveli Halwa


Comment "What is the specialty of Tirunelveli Halwa???"

Amazing Facts About Human Eye





உவரி - சுயம்புலிங்க சுவாமி.


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உவரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரிகிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.இதனால்அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.
அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவேதோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்றுவிட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது. இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீராபிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரிகோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும்வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது. உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறியலிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்
தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் பிற பரிவார தேவதைகளும்உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.