Tuesday, December 11, 2012

Fun of the Day:


Fun of the Day:

Type 'Google Sphere'

Click on the First search result

Watch what happens :-)

செங்கோட்டை


செங்கோட்டை திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும் . இங்கு மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. அதனால் மழை அதிகம் பொழிகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது.

இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூ
லபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர். முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன.

கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது. செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அறிஞர் அண்ணா


இன்றுஅறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்
அவரை பற்றிய சில குறிப்புகள் தெரிந்துகொள்வோமா!

இவர் 15-09-1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் நடராசன், , தயார் பெயர் பங்காரு அம்மாள் ஆகும் 1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்
றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானிபொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார் .

நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.இவர் தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார் ….

விடுகதை:


விடுகதை:

ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?

திருக்குறுங்குடி:



திருக்குறுங்குடி:


தல வரலாறு: ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த
்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார்.

இதன் பலனாகவே ஒரு முறை பின்தங்கியவகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை முற்றி மனிதனை சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.

பெயர்க்காரணம்: நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடி' ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.



நம்பாடுவானுக்காக நகர்ந்த கொடிமரம்: திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியை பார்க்கமால் போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்கு தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.


சைவ வைணவ ஒற்றுமை: சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும்.
கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது,

இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

தல சிறப்பு: பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.

தெரிந்துகொள்வோம் நண்பர்களே !!!


தெரிந்துகொள்வோம் நண்பர்களே !!!

♥ இந்தியா - மயில்
♥ மியான்மர் - மயில்
♥ டென்மார்க் - வானம்பாடி
♥ கனடா - வாத்து
♥ கொலம்பியா - பருந்து
♥ மலேசியா - மாயா
♥ அயர்லாந்து - முத்துசென்னி
♥ பெல்ஜியம் - செஸ்ட்ரல்
♥ தென்னாப்பிரிக்கா- நீலக் கொக்கு
♥ அமெரிக்கா - கழுகு
♥ நியூசிலாந்து - கிவி
♥ இங்கிலாந்து - ராபின்
♥ ஜெர்மனி - கொக்கு

"இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை..."



இன்பத்திலும்,
துன்பத்திலும்,
நீங்கள்
நினைவில் கொள்ள
வேண்டிய
ஒரு விஷயம்...


"இந்த நிமிடம்
நிரந்தரம் இல்லை..."

பஞ்ச பூத தலங்கள் (தென்பாண்டி நாடு )


பஞ்ச பூத தலங்கள் (தென்பாண்டி நாடு )

* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி) - சங்கர நாராயணசுவாமி திருக்கோயில்

* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம் - பால்வண்ணநாத சுவாமி

* தாருகாபுரம் - நீர் தலம் - மத்தியஸ்தநாத சுவாமி கோவில்

* தென்மலை- காற்று தலம் - திரிபுரநாத சுவாமி கோவில்

* தேவதானம் - ஆகாய தலம் - நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில்

Manjolai


Manjolai

Updated about 2 weeks ago
Pictures of Manjolai